வெள்ளி, 15 நவம்பர், 2024

இன்று
ஏன் என்னை கைவிட்டாய்
இம்மாபெரும் பிரபஞ்சத்தில்
ஒரு மலர்கூடவா
இல்லை எனக்குத்தர
மலரின் சுகந்தத்தை
வீசக்கூடவா
உனக்கு மனமில்லை
நீ அளித்த
வெறுமையை அல்ல
என் அறைமுழுதும்
இருக்கும் மலர்களுக்கு
மத்தியில்
ஒரு மலரின்மையை
வைக்கிறேன்
ஜன்னல் வழி விழும்
உதயத்தின் கிரணங்கள்
மலர்கிறது மலரின்மையில்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஜனனம் மரணம்

அடங்கும் ஒவ்வொரு அகலும் அதன் புகையும் கனவில் காண்பது எதனை? சிறு சொட்டாய் துளிர்க்கும் சுடரில் ஒளிரும் கனவு எது?