இம்மாபெரும்
கூண்டுக்குள்சுற்றிச்
சுற்றி
பட்டுப்பூச்சியே
இக்கணம்தான்
என எப்படித்தேர்ந்து
வந்தமர்ந்தாய்
தூரிகை நுனியில்
இறகு வழி
ஒழுகி
இக்கணங்களுள்
இக்கணம்தான்
என எப்படித்தேர்ந்து
வந்துபரவியது
உன் வண்ணம்
நெஞ்சமெலாம்
அடங்கும் ஒவ்வொரு அகலும் அதன் புகையும் கனவில் காண்பது எதனை? சிறு சொட்டாய் துளிர்க்கும் சுடரில் ஒளிரும் கனவு எது?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக