புதன், 6 நவம்பர், 2024

இம்மாபெரும்
கூண்டுக்குள்
சுற்றிச்
சுற்றி
பட்டுப்பூச்சியே
இக்கணம்தான்
என எப்படித்தேர்ந்து
வந்தமர்ந்தாய்
தூரிகை நுனியில்

இறகு வழி
ஒழுகி
இக்கணங்களுள்
இக்கணம்தான்
என எப்படித்தேர்ந்து
வந்துபரவியது
உன் வண்ணம்
நெஞ்சமெலாம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஜனனம் மரணம்

அடங்கும் ஒவ்வொரு அகலும் அதன் புகையும் கனவில் காண்பது எதனை? சிறு சொட்டாய் துளிர்க்கும் சுடரில் ஒளிரும் கனவு எது?