செவ்வாய், 19 நவம்பர், 2024

என் வயல்களைக்
கடந்து வலசை செல்லும்
பறவைக்கூட்டமொன்றைக்
கண்டிருந்தேன்
ஒரு பறவை
'வருடா வருடம் இவ்வழிதான்
வலசை செல்கிறோம்' என்றது
'எத்தனை வருடமாக' என்றேன்
'அது தெரியாது
ஆனால் முதல்வலசையில்
பூமியில்
மனிதர்களே இல்லை' என்றது
நான் தாகூரைப்போல்
மூர்ச்சையடித்து
விழுந்தேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிருஷ்டியின் போக்கு

அதலம், விதலம், சுதலம், தராதலம், ரசாதலம், மகாதலம், பாதாளம் - நம் காலுக்குக்கீழிருக்கும் ஏழு லோகங்கள் இவை. நம் மனதிற்குள்ளும் இத்தனை லோகங்களும...