செவ்வாய், 19 நவம்பர், 2024

என் வயல்களைக்
கடந்து வலசை செல்லும்
பறவைக்கூட்டமொன்றைக்
கண்டிருந்தேன்
ஒரு பறவை
'வருடா வருடம் இவ்வழிதான்
வலசை செல்கிறோம்' என்றது
'எத்தனை வருடமாக' என்றேன்
'அது தெரியாது
ஆனால் முதல்வலசையில்
பூமியில்
மனிதர்களே இல்லை' என்றது
நான் தாகூரைப்போல்
மூர்ச்சையடித்து
விழுந்தேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உதிர்ந்து செல்லும் சொல்

 சுற்றி சுற்றி உன்னைத்தான் பற்றிக்கொள்கிறேன் இத்தனை தனிமையான இரவில் காலம் பிரம்மாண்டமாய் கிடப்பதைக் கண்டபின்  முழுதும் அமைதிகொண்டுள்ளேன் இவ்...