லட்சம் வருடங்கள்
இருக்குமாஉன் விதையின்
பரம்பரை
என்றேன்
ஆலமரத்திடம்
கண் விழித்துப்பார்த்து
கண் மூடி ஆழ்ந்தது
ஒரே ஒரு நொடி
கேட்டது
அது லயித்திருக்கும்
அகாலத்தின்
மணிநாதம்
அடங்கும் ஒவ்வொரு அகலும் அதன் புகையும் கனவில் காண்பது எதனை? சிறு சொட்டாய் துளிர்க்கும் சுடரில் ஒளிரும் கனவு எது?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக