சுற்றி சுற்றி
உன்னைத்தான் பற்றிக்கொள்கிறேன்
இத்தனை தனிமையான இரவில்
காலம் பிரம்மாண்டமாய் கிடப்பதைக்
கண்டபின்
முழுதும் அமைதிகொண்டுள்ளேன்
இவ்வமைதி என்னை எதை நோக்கி
இட்டுச்செல்லுமோ?
உன் இருப்புகளின் பெருவெளியில் தேவதைகள் உண்டெனில்
ஒளியை சிறகாய் கொண்டுள்ள ஒரு தேவதையை
அனுப்பி வை
என் காதுகளில் நான் கேட்க விரும்புவது எல்லாம்
நதி கூழாங்கற்களிடம் சொல்லும் அச்சொல்லைத்தான்
இருப்புகளின் பெருக்கில் இயல்பாக
உதிர்ந்து போகும் ஒரு சொல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக