இருளின் பாசுரங்களை
ஒற்றைக்குரலாய்ஒலிக்கிறது
ஊரெல்லாம் ஏற்றப்பட்ட
அகல் சுடர்
ஊருக்கு
வெளியே
இருளுக்குள் அமர்ந்திருக்கும்
தெய்வத்தின்
முன் எரிகிறது
ஒற்றை தீபம்
இருளின்
நாம உச்சாடனமென
ஒற்றை தீபம்
இருளின்
நாம உச்சாடனமென
அடங்கும் ஒவ்வொரு அகலும் அதன் புகையும் கனவில் காண்பது எதனை? சிறு சொட்டாய் துளிர்க்கும் சுடரில் ஒளிரும் கனவு எது?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக