வெள்ளி, 15 நவம்பர், 2024

ஒளிச்சொல்

இருளின் பாசுரங்களை
ஒற்றைக்குரலாய்
ஒலிக்கிறது
ஊரெல்லாம் ஏற்றப்பட்ட
அகல் சுடர்

ஊருக்கு
வெளியே
இருளுக்குள் அமர்ந்திருக்கும்
தெய்வத்தின்
முன் எரிகிறது
ஒற்றை தீபம்
இருளின்
நாம உச்சாடனமென

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஜனனம் மரணம்

அடங்கும் ஒவ்வொரு அகலும் அதன் புகையும் கனவில் காண்பது எதனை? சிறு சொட்டாய் துளிர்க்கும் சுடரில் ஒளிரும் கனவு எது?