வெள்ளி, 15 நவம்பர், 2024

ஒளிச்சொல்

இருளின் பாசுரங்களை
ஒற்றைக்குரலாய்
ஒலிக்கிறது
ஊரெல்லாம் ஏற்றப்பட்ட
அகல் சுடர்

ஊருக்கு
வெளியே
இருளுக்குள் அமர்ந்திருக்கும்
தெய்வத்தின்
முன் எரிகிறது
ஒற்றை தீபம்
இருளின்
நாம உச்சாடனமென

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பெரும் சதுப்பு அசைவறுத்த முதலை அசைவில்லாத பறவை அசைவற்ற நீரில் மிதக்கும் அசைவேதுமற்ற சிறு பூச்சி சதுப்பின் ரீங்காரம் ஊன்றிய கால் வழி ...