வியாழன், 28 நவம்பர், 2024

உயிர்த்தின்னும்
சுடலைப்பேயொன்று
பசி பசி என
வந்தது
பசி‌‌யடக்கு பசியடக்கு
என என்னை நான்
திண்ணக்கொடுத்தபோது
ஒரு கணம் பேய்க்கண்ணால்
திகைத்து நோக்கி
அதிரச் சிரித்து
ஆதிச்சலனம் பிறப்பித்தவை
சலனமோய்வதேயில்லை என்றது
மேலும் சிரித்து
சலனத்தின்
கனவுகளில் பிறந்துகொண்டேயிருக்கிறது
ஆதிக்கும் முன்னான
சலனமின்மை என்றது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஜனனம் மரணம்

அடங்கும் ஒவ்வொரு அகலும் அதன் புகையும் கனவில் காண்பது எதனை? சிறு சொட்டாய் துளிர்க்கும் சுடரில் ஒளிரும் கனவு எது?