வெள்ளி, 22 நவம்பர், 2024

என் வானங்கள்
தெளிவடைவதேயில்லை
வனங்கள் பற்றியுள்ளன
அணையா நெருப்புகளை
வெடித்துக்கிடக்கும்
பிலங்கள் நீருக்குக்
காத்துள்ளன
ஓயாப்பசியொன்று
கூர்திட்டிப் பதுங்கியுள்ளது
புலனெல்லாம்
பற்றிச்செல்கின்றன
தன் தன் வேட்கைகளை
பெருங்காற்று
அள்ளிவருகிறது
ஓயா இச்சைகளை
எல்லாம் கண்டிருக்கும்
நெஞ்சத்தின் ஆழச்சதுப்புகளில்
சிறு குமிழென வெடிக்கிறது
நிம் நாமம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஜனனம் மரணம்

அடங்கும் ஒவ்வொரு அகலும் அதன் புகையும் கனவில் காண்பது எதனை? சிறு சொட்டாய் துளிர்க்கும் சுடரில் ஒளிரும் கனவு எது?