வெள்ளி, 22 நவம்பர், 2024

'காலத்தை
ஏன் சர்ப்பமென்கிறாய்?'

'இத்தனை
கொடியதும் அச்சம் தருவதும்
இதுதான்'

'காலத்தை
ஏன் காற்றென்கிறாய்?'

'காண முடியாததும்
ஆனால் நம்முள்
புகுந்கு ஓடிக்கொண்டிருபதும்
இதுதான்'

'காலத்தை
ஏன் வானென்கிறாய்?'

'நீலம் மட்டுமே எங்கும்
உண்மையில் வானென்பது
எது?'

'காலத்தை
காலமின்மையில்
காண்கிறாயா?'

'ஆம்
காலம் பிறந்தது
காலமின்மையில்'

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உதிர்ந்து செல்லும் சொல்

 சுற்றி சுற்றி உன்னைத்தான் பற்றிக்கொள்கிறேன் இத்தனை தனிமையான இரவில் காலம் பிரம்மாண்டமாய் கிடப்பதைக் கண்டபின்  முழுதும் அமைதிகொண்டுள்ளேன் இவ்...