வெள்ளி, 22 நவம்பர், 2024

'காலத்தை
ஏன் சர்ப்பமென்கிறாய்?'

'இத்தனை
கொடியதும் அச்சம் தருவதும்
இதுதான்'

'காலத்தை
ஏன் காற்றென்கிறாய்?'

'காண முடியாததும்
ஆனால் நம்முள்
புகுந்கு ஓடிக்கொண்டிருபதும்
இதுதான்'

'காலத்தை
ஏன் வானென்கிறாய்?'

'நீலம் மட்டுமே எங்கும்
உண்மையில் வானென்பது
எது?'

'காலத்தை
காலமின்மையில்
காண்கிறாயா?'

'ஆம்
காலம் பிறந்தது
காலமின்மையில்'

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிருஷ்டியின் போக்கு

அதலம், விதலம், சுதலம், தராதலம், ரசாதலம், மகாதலம், பாதாளம் - நம் காலுக்குக்கீழிருக்கும் ஏழு லோகங்கள் இவை. நம் மனதிற்குள்ளும் இத்தனை லோகங்களும...