பதாகையில் என் சிறுகதை,
Monday, March 21, 2022
Friday, March 11, 2022
கிளையமர்ந்த புள்ளொன்று
உதிர்த்ததுஅந்நாளின்
முதற்சொல்லை
பின் காடெனப்
பெருகிற்று
சொல்
மழையென
கொட்டிற்று
சொல்
கடலெனத் தேங்கியும்
நதியென ஓடியும்
முயங்கி
சேர்ந்து
பிரிந்து
கைமீறிப்
பெருகிற்று
சொல் எனும் விதை
பின்
இரவின்
கடைசி உயிர்
ஓயாது உழட்டிற்று
ஒற்றை சொல்லை
மந்திர உச்சாடனமென
கடலும் நதியும் மழையும்
எஞ்சிற்று
ஒரு துளி நீராக
அவ்வொரு சொல்
ஓய்வதைக் காண
அங்கு யாருமில்லை
காலம் அந்நாளை
முதுகுப் பையில்
சுமந்து
அடுத்த யுகம்
சென்றுவிட்டது
Wednesday, March 9, 2022
இந்த வானத்தின்
கீழ் இருக்கும் கோடானகோடிகளில்
உனக்குக் கொடுக்க
என்னிடமிருக்கும்
ஒரு சிறு மின்மினிப்பூச்சியை
உச்சிவெயில் பொழுதில்
உன்னிடம் நீட்டுகிறேன்
பூமியின் மறுபாதியின்
பேரிரவில்
ஆயிரம் மின்மினிகள்
சிறகடிக்கும் சிறு எல்லையின்
ஆயிரம் சொற்களாய்
ஆயிரம் சூரியன்களாய்
ஒளிர்வதை
உனக்குக் காட்டும்
மந்திரச் சொல்லை
உன் கையிலிருக்கும்
உனக்குக் கொடுக்க
என்னிடமிருக்கும்
ஒரு சிறு மின்மினிப்பூச்சியை
உச்சிவெயில் பொழுதில்
உன்னிடம் நீட்டுகிறேன்
பூமியின் மறுபாதியின்
பேரிரவில்
ஆயிரம் மின்மினிகள்
சிறகடிக்கும் சிறு எல்லையின்
ஆயிரம் சொற்களாய்
ஆயிரம் சூரியன்களாய்
ஒளிர்வதை
உனக்குக் காட்டும்
மந்திரச் சொல்லை
உன் கையிலிருக்கும்
ஒளியற்ற மின்மினி
உரைக்கட்டும்
Subscribe to:
Posts (Atom)
அந்தப் புலரியின் நிறப் பிரளயத்தின் முன் உயிரற்று நிற்கையில் தூரத்துப் பறவைக்குரல் விடுவித்தது நிறத்தை சுழித்து கலவையாக்கும் கண்ணீர்...
-
வழக்கத்திலிருந்து மாறுபடுபவை தனியாகத் தெரிகின்றன. என் வாசிப்பில் நான் முதலில் கண்ட புதுமை ஜே ஜே சில குறிப்புகள். பின் ஸீரோ டிகிரி. இ...
-
உன் கொலொசொலிதான் பூமியை ஆக்கியது ஜீவராசிகளின் மூச்சாகியது மானுடரின் கண்ணீரும் நகையும் முரண்களும் பாவங்களும் சலனங்களும் எல்லாம் எல்...
-
சொல்வனத்தில் வெளியான என் சிறுகதையின் இணைப்பு, படைத்தல்