பதாகையில் என் சிறுகதை,
திங்கள், 21 மார்ச், 2022
வெள்ளி, 11 மார்ச், 2022
கிளையமர்ந்த புள்ளொன்று
உதிர்த்ததுஅந்நாளின்
முதற்சொல்லை
பின் காடெனப்
பெருகிற்று
சொல்
மழையென
கொட்டிற்று
சொல்
கடலெனத் தேங்கியும்
நதியென ஓடியும்
முயங்கி
சேர்ந்து
பிரிந்து
கைமீறிப்
பெருகிற்று
சொல் எனும் விதை
பின்
இரவின்
கடைசி உயிர்
ஓயாது உழட்டிற்று
ஒற்றை சொல்லை
மந்திர உச்சாடனமென
கடலும் நதியும் மழையும்
எஞ்சிற்று
ஒரு துளி நீராக
அவ்வொரு சொல்
ஓய்வதைக் காண
அங்கு யாருமில்லை
காலம் அந்நாளை
முதுகுப் பையில்
சுமந்து
அடுத்த யுகம்
சென்றுவிட்டது
புதன், 9 மார்ச், 2022
இந்த வானத்தின்
கீழ் இருக்கும் கோடானகோடிகளில்
உனக்குக் கொடுக்க
என்னிடமிருக்கும்
ஒரு சிறு மின்மினிப்பூச்சியை
உச்சிவெயில் பொழுதில்
உன்னிடம் நீட்டுகிறேன்
பூமியின் மறுபாதியின்
பேரிரவில்
ஆயிரம் மின்மினிகள்
சிறகடிக்கும் சிறு எல்லையின்
ஆயிரம் சொற்களாய்
ஆயிரம் சூரியன்களாய்
ஒளிர்வதை
உனக்குக் காட்டும்
மந்திரச் சொல்லை
உன் கையிலிருக்கும்
உனக்குக் கொடுக்க
என்னிடமிருக்கும்
ஒரு சிறு மின்மினிப்பூச்சியை
உச்சிவெயில் பொழுதில்
உன்னிடம் நீட்டுகிறேன்
பூமியின் மறுபாதியின்
பேரிரவில்
ஆயிரம் மின்மினிகள்
சிறகடிக்கும் சிறு எல்லையின்
ஆயிரம் சொற்களாய்
ஆயிரம் சூரியன்களாய்
ஒளிர்வதை
உனக்குக் காட்டும்
மந்திரச் சொல்லை
உன் கையிலிருக்கும்
ஒளியற்ற மின்மினி
உரைக்கட்டும்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
பெரும் சதுப்பு அசைவறுத்த முதலை அசைவில்லாத பறவை அசைவற்ற நீரில் மிதக்கும் அசைவேதுமற்ற சிறு பூச்சி சதுப்பின் ரீங்காரம் ஊன்றிய கால் வழி ...
-
சுந்துவுக்கு தலையில் அடி ஆட்டோவைக்கூப்பிடு ஆஸ்பத்திரிக்கு ஓடு தையலைப்போடு அழுது கணத்த முகத்துடன் ஒரு தூக்கத்தைப்போடு பின் முழித்துக...
-
படைப்பாக மலர்பவை யாவும் உணர்வுகளே. ஏதோ ஒரு உணர்வே ஒரு படைப்பின் மையம். அதீத உணர்வு என்றால் மேலும் பொருந்தும். தட்டையான இயல்பு மீறாத ஒரு...
-
உடலெல்லாம் காதல் வழிந்துக் கிடக்கிறது சில கதவுகளை திறந்துவிட்டிருக்கிறேன் அத்தனை களைப்பையும் நிரப்பி ஒரு புட்டிலை உடைத்து வீசினேன் எங...