வியாழன், 7 நவம்பர், 2024

காலம் விழுங்கி
அமர்ந்திருக்கும்
மலைக்கோயிலைக்
கண்டபோது
கட்டுவித்த வீரனையும்
அவன் வாளையும்
கண்டேன்
பின் பிம்பம்
காட்டும் மெழுகுடன்
கூடிய நந்தியைச்
செய்த உளிதான்
கட்டுவித்தது
எனக் கொண்டேன்
கூனுடன் கைங்கர்யம்
செய்யும் பட்டரின்
கொடிவழி என ஊகித்தேன்
சொல்லின்றி ஒளிரும்
கருவறை தீபம்தான்
என நினைத்துக்கொண்டேன்
பின் வழியிறங்கி
கோயில் கண்மறைந்தபோது
சிரித்தது
கட்டுவித்தது
மலையினூடே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உதிர்ந்து செல்லும் சொல்

 சுற்றி சுற்றி உன்னைத்தான் பற்றிக்கொள்கிறேன் இத்தனை தனிமையான இரவில் காலம் பிரம்மாண்டமாய் கிடப்பதைக் கண்டபின்  முழுதும் அமைதிகொண்டுள்ளேன் இவ்...