செவ்வாய், 26 நவம்பர், 2024

சொல் எனும்‌ தெய்வம்

சொல்லின் சமிக்ஞைகள்
வான்நீலம் பாவிய விரல்களால்
அழைத்துக்கொண்டே இருக்கிறது
எழுந்து செல்வதற்கான
ஆணை ஆழத்திலிருந்து
ஒரு சொடுக்கலாக எழுந்தது
வானமே அலையென
விழுந்து அள்ளிச் சென்றது
ஆயிரம் வண்ணங்கள் காட்டி
ஓராயிரம் இருள் சொரிந்து
கசடுகளோடு அனைத்துமென்றது
இசையின் பறவைகளால் ஆன 
ஒரு அந்தியை வரைந்து காட்டி
துயரத்தின் ஆழத்தில் உரையும்‌ 
இன்பத்தைக் காண் என்றது
அதனதன் தன்மைக்கு முன் எத்தன்மையதென
அதனதன் தன்மை
எத்தன்மை நோக்கி
எழுகிறதெனக் காணச்செய்து
வனத்தீ எரிந்தடங்குகையில்
என்னை
சொல்லின்மையின் சமிக்ஞைகள்
கேட்கும் வெளியில்
விட்டுச் சென்றது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பெரும் சதுப்பு அசைவறுத்த முதலை அசைவில்லாத பறவை அசைவற்ற நீரில் மிதக்கும் அசைவேதுமற்ற சிறு பூச்சி சதுப்பின் ரீங்காரம் ஊன்றிய கால் வழி ...