Wednesday, August 3, 2022

மழைப்பறவைகள்
ஆகாசச் சிறகடிக்கின்றன
பூமி மெல்ல
எழுகிறது
ஏன் எது என்ற
திசையின்றி
கேள்வியன்றி
ஒளி சென்றமைகிறது
ஆயிரமாயிரம்
அண்டம் நிறைத்து
ஒழுகும்
மழைத்துளிகளில்

அந்தப் புலரியின் நிறப் பிரளயத்தின் முன் உயிரற்று நிற்கையில் தூரத்துப் பறவைக்குரல் விடுவித்தது நிறத்தை சுழித்து கலவையாக்கும் கண்ணீர்...