Tuesday, November 29, 2022

திருக்கூத்து - சிறுகதை

 சொல்வனத்தில் வெளியான என் சிறுகதையின் இணைப்பு,

திருக்கூத்து

தன்னளவில் ஒரு முழுமையான வடிவம் இக்கதைக்கு உண்டு. அதே நேரம் திருநடம் எனும் சிறுகதையின் நீட்சியாகவும் வாசிக்கலாம்.

Sunday, October 9, 2022

படைத்தல் - சிறுகதை

சொல்வனத்தில் வெளியான என் சிறுகதையின் இணைப்பு,

படைத்தல்


Thursday, September 15, 2022

திருநடம் - சிறுகதை

சொல்வனத்தில் பிரசுரமான என் சிறுகதையின் இணைப்பு,

திருநடம்

Wednesday, August 3, 2022

மழைப்பறவைகள்
ஆகாசச் சிறகடிக்கின்றன
பூமி மெல்ல
எழுகிறது
ஏன் எது என்ற
திசையின்றி
கேள்வியன்றி
ஒளி சென்றமைகிறது
ஆயிரமாயிரம்
அண்டம் நிறைத்து
ஒழுகும்
மழைத்துளிகளில்

Monday, July 25, 2022

பூரணம் - சிறுகதை

சொல்வனத்தில்‌ பிரசுரிக்கப்பட்ட என் சிறுகதையின் இணைப்பு,

பூரணம்


Monday, June 13, 2022

அப்பால்

 சொல்வனத்தில் வெளியான மற்றொரு சிறுகதை, அதன் லிங்க்

அப்பால்

Friday, May 13, 2022

லீலாதேவி - சிறுகதை

 சொல்வனத்தில் வெளியான என் சிறுகதையின் இணைப்பு,

லீலாதேவி சிறுகதை

Friday, March 11, 2022

கிளையமர்ந்த புள்ளொன்று
உதிர்த்தது
அந்நாளின்
முதற்சொல்லை

பின் காடெனப்
பெருகிற்று
சொல்
மழையென
கொட்டிற்று
சொல்
கடலெனத் தேங்கியும்
நதியென ஓடியும்
முயங்கி
சேர்ந்து
பிரிந்து
கைமீறிப்
பெருகிற்று
சொல் எனும் விதை

பின்
இரவின்
கடைசி உயிர்
ஓயாது உழட்டிற்று
ஒற்றை சொல்லை
மந்திர உச்சாடனமென
கடலும் நதியும் மழையும்
எஞ்சிற்று
ஒரு துளி நீராக

அவ்வொரு சொல்
ஓய்வதைக் காண
அங்கு யாருமில்லை
காலம் அந்நாளை
முதுகுப் பையில்
சுமந்து
அடுத்த யுகம்
சென்றுவிட்டது

Wednesday, March 9, 2022

இந்த வானத்தின்
கீழ் இருக்கும் 
கோடானகோடிகளில்
உனக்குக் கொடுக்க
என்னிடமிருக்கும்
ஒரு சிறு மின்மினிப்பூச்சியை
உச்சிவெயில் பொழுதில்
உன்னிடம் நீட்டுகிறேன்

பூமியின் மறுபாதியின்
பேரிரவில்
ஆயிரம் மின்மினிகள்
சிறகடிக்கும் சிறு எல்லையின்
ஆயிரம் சொற்களாய்
ஆயிரம்‌ சூரியன்களாய்
ஒளிர்வதை
உனக்குக் காட்டும்
மந்திரச் சொல்லை
உன் கையிலிருக்கும்
ஒளியற்ற மின்மினி
உரைக்கட்டும்
அமைதியில் விழுந்து
வழியும் மழை

எச்சொல்லுமின்றி
மெல்லப் படியும்
இரவுப் பனி

மோனத்துடன்
விழுந்து உடையும்
வெயில்

சுவடின்றி
உயிர்ன்றி
உடலின்றி
அலையும் காற்று

யுகங்களாய்ப் பிறந்த
கோடிச் சொற்களில்
ஒன்றையும்
கேளா உரைக்கா
மலைகள்

இவற்றினூடே
ஒழுகிச் செல்கிறது
பெருங்காலம்
பல
பல சிறுவாழ்க்கை
பல சிறுவாழ்க்கைகள்

Tuesday, January 11, 2022

துளிக்‌கடல்

உன் முன்

ஒரு துளி
அனலை வைக்கிறேன்

ஒரு துளி பனி

ஒரு துளி இரவு

ஒரு துளி கண்ணீர்

ஒரு‌துளி புன்னகை

ஒரு துளி தயக்கம்

ஒரு துளி காதல்

ஒரு‌ துளி மலர்

ஒரு துளி உதயம்

ஒரு துளி மழை

ஒரு துளி ஆசை

ஒரு துளி வெறுப்பு

ஒரு துளி ஆனந்தம்

ஒரு துளி சலிப்பு

ஒரு துளி பெண்மை

ஒரு துளி ஆண்மை

ஒரு துளி குழந்தைமை

ஒரு துளி நட்பு

ஒரு துளி உறவின்மை

ஒரு துளி வானம்

ஒரு துளி இல்லம்

ஒரு துளி காமம்

ஒரு துளி ஆதரவு

ஒரு துளி கைவிடுதல்

ஒரு துளி துரோகம்

ஒரு துளி பொய்

ஒரு துளி கொலை

ஒரு துளி இரத்தம்

ஒரு துளி வஞ்சம்

ஒரு துளி தத்தளிப்பு

ஒரு துளி நிலைகொள்ளல்

ஒரு துளி மரணம்

ஒரு துளி வாழ்க்கை

ஒரு துளி சரணைடைதல்

ஒரு துளி கனவு

ஒரு துளி வானவில்

ஒரு துளி அழகு

ஒரு துளி கோரம்

ஒரு துளி கீழ்மை

ஒரு துளி ஊடல்

ஒரு துளி பிரிவு

ஒரு துளி தனிமை

ஒரு துளி முதல் முத்தம்

ஒரு துளி கடைசி முத்தம்

ஒரு துளி விடைபெறல்

ஒரு துளி மறதி

ஒரு துளி நினைவின்மை

ஒரு துளி உருமாற்றம்

ஒரு துளி ஆழம்

ஒரு துளி சலனம்

ஒரு துளி கடத்தல்

கடலிலிருந்து
எழும் அலைத்துமிகள்
கடலினதே அல்லவா?

Sunday, January 9, 2022

என் சிறுகதை

 பதாகை இதழில்‌ என்‌ முதல் சிறுகதை வெளியாகியுள்ளது. அத‌ன் இணைப்பு கீழே,

அகம்

சலனமாகாத காதல்

மண்டியிடுங்கள் தந்தையே நாவல் வாசித்தபின் எஸ்.ராவிற்கு ஒரு கடிதம் எழுதினேன். அது எஸ்.ராவின் தளத்தில் வெளியாகியுள்ளது. அதன் லிங்க் கீழே.

சலனமாகாத காதல்

அந்தப் புலரியின் நிறப் பிரளயத்தின் முன் உயிரற்று நிற்கையில் தூரத்துப் பறவைக்குரல் விடுவித்தது நிறத்தை சுழித்து கலவையாக்கும் கண்ணீர்...