செவ்வாய், 19 ஜனவரி, 2021

காவியம்

மழுங்கிய வாட்களால்
நாம் ஆடும்
இந்நீள் யுத்தத்தில்
கழுத்துகள் அறுந்தோடவில்லை
குருதி பெறுக்கெடுக்கவில்லை

கொல்லும்‌துணிவின்றி
வாளுதறி இருகப்புல்லும்
அன்பின் முழுமையின்றி
நீள்கிறது
நீள்கிறது
போர்

எல்லாம் கூர்கொண்டு
முழுதமைந்து
முழுக்குருதியும்
அன்பின் முழுக்கண்ணீரும் சிந்தப்பட்டதெல்லாம்
யாரோ ஒருவன்
தீட்டிய
அம்மாபெரும் ஓவியத்தில்
மட்டும்

செவ்வாய், 12 ஜனவரி, 2021

 நீரின்றி
வற்றிய நிலத்தின்
வெடிப்புப் பிளவுகள்
உடலெல்லாம் பரப்பி
இலையுதிர்த்து
நிற்கும்
தனி மரம்

ஆயிரம் காற்றுகளில்

பல்லாயிரம் பெருங்காலங்ளில்

மணலுரசும் நெருடலென
நொடிகளில்

இயற்றி நிற்கின்றது

தவத்தை

இருத்தலை

இருப்பெனும் தவத்தை

திங்கள், 11 ஜனவரி, 2021

யுகத்திற்குப் பின் ஒரு விடியல்

 இருளாழம் நோக்கி
இருளைத் திறந்து
இருளுக்குள்
செல்லும் உன்னை
ஆராதிக்கிறது
இருள்
ஒரு சுடரென

நான் யார்?

சொல்‌ பிறந்தது உன்னில் சொல் சென்றோய்வது உன்னில் இடைப்பட்ட அச்சிறுகாலம் அகலென ஏந்திய சொற்சுடரொளியில் ஆற்றுவிக்கும் கண்ணீர்த்துளியால் ...