காற்சிலம்பொலி
கேட்கிறதுஉடுக்கையில் எழுகிறது
வனத்தின் உருமல்
இருள் ஏர் கானிருட்டில்
எழுந்துவிட்டது
இதோ
சங்கின் ஒலியில் யுகம் புரள்கிறது
தர்க்கத்தை தூர வையுங்கள்
பித்தின் வெளிக்கு
சித்தமாகட்டும் நம் படைகள்
அடங்கும் ஒவ்வொரு அகலும் அதன் புகையும் கனவில் காண்பது எதனை? சிறு சொட்டாய் துளிர்க்கும் சுடரில் ஒளிரும் கனவு எது?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக