காலம்
இப்பறவைஎங்கும்
பறப்பதேயில்லை
பார்ப்பவர் மனதில்
பறப்பதாய்
ஒரு கனவை
தோன்றச்செய்கிறது
அகாலம்
இப்பறவை
அபாரமாய்
சிறகடிக்கிறது
பார்ப்பவர் கண்களுக்கு
கிளைநீங்கா
தோற்றம் தருகிறது
அடங்கும் ஒவ்வொரு அகலும் அதன் புகையும் கனவில் காண்பது எதனை? சிறு சொட்டாய் துளிர்க்கும் சுடரில் ஒளிரும் கனவு எது?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக