ஞாயிறு, 17 நவம்பர், 2024

மாகாலம்

இந்த சிவன்கோயில்
மட்டும் மூவாயிரம்
வருடம் பழையதல்ல
கூப்பிய கரங்களும்தான்
பட்டரும்தான்
மணிநாதமும் தான்
வாயிலில் இருக்கும்
பூக்கடையும்தான்
பூக்கட்டும் அம்மாளும்தான்
பூவை நாரில் கட்டும் விரல்களும்தான்
ஆனால்
அதன் நடனபாவத்தினிடையே
விழும் உதிர்ப்பூக்கள்
சென்று விழுவது மட்டும்
மாகாலசிவத்தில்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உதிர்ந்து செல்லும் சொல்

 சுற்றி சுற்றி உன்னைத்தான் பற்றிக்கொள்கிறேன் இத்தனை தனிமையான இரவில் காலம் பிரம்மாண்டமாய் கிடப்பதைக் கண்டபின்  முழுதும் அமைதிகொண்டுள்ளேன் இவ்...