ஞாயிறு, 17 நவம்பர், 2024

மாகாலம்

இந்த சிவன்கோயில்
மட்டும் மூவாயிரம்
வருடம் பழையதல்ல
கூப்பிய கரங்களும்தான்
பட்டரும்தான்
மணிநாதமும் தான்
வாயிலில் இருக்கும்
பூக்கடையும்தான்
பூக்கட்டும் அம்மாளும்தான்
பூவை நாரில் கட்டும் விரல்களும்தான்
ஆனால்
அதன் நடனபாவத்தினிடையே
விழும் உதிர்ப்பூக்கள்
சென்று விழுவது மட்டும்
மாகாலசிவத்தில்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஜனனம் மரணம்

அடங்கும் ஒவ்வொரு அகலும் அதன் புகையும் கனவில் காண்பது எதனை? சிறு சொட்டாய் துளிர்க்கும் சுடரில் ஒளிரும் கனவு எது?