ஒளியைத் தேடிக்கொண்டிருக்கும்
நான்விட்டில் அல்ல
இருள்
இதோ
என் உடலைத்
திண்கிறது ஒளி
என் உடலும்
திண்கிறது ஒளியை
என் மனமெல்லாம் நிறைகிறது
பெருகிப் பெருகி
பெருகிப் பெருகி
உயிர்பெருகிச் சாவேன்
ஒளியால்
அடங்கும் ஒவ்வொரு அகலும் அதன் புகையும் கனவில் காண்பது எதனை? சிறு சொட்டாய் துளிர்க்கும் சுடரில் ஒளிரும் கனவு எது?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக