செவ்வாய், 26 நவம்பர், 2024

சொல்தான்
அழைத்துச்சென்று
நதியைக் காட்டியது
மலரைக் காட்டியது
யானைகளைக் காட்டியது
இலைகளைக் காட்டியது
வனங்களை
கடலை
வானத்தைக் காட்டியது
பின்
அளப்பரியது என்றது
சொல்லில் அடங்காது என்றது
பொருள் நேரானதல்ல என்றது
இரவின் ஓசைகளைக் கேள் என்றது
விழு நட்சத்திரம்தான் ஆதிச்சொல் என்றது
சொல்லுக்கு அப்பால் பார் என்றது
புலன்களால் அல்ல என்றது
ஆத்மம் என்றது
சொல்லின்மையில் ஆழ்ந்து போ என்றது
சிலருக்கு
சொல் தேவையில்லை
ஒரு மலரைக் கண்டால் போதுமென்றது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஜனனம் மரணம்

அடங்கும் ஒவ்வொரு அகலும் அதன் புகையும் கனவில் காண்பது எதனை? சிறு சொட்டாய் துளிர்க்கும் சுடரில் ஒளிரும் கனவு எது?