வியாழன், 7 நவம்பர், 2024

மலையை
குருவெனக்‌கொண்டு
அதன்
ஒற்றைச் சொல்
நீண்டு செல்லும்
தடத்தில் திரிகையில்
இருளைவீசும் ஒளிவாளும்
ஒளிவாளை வீசும் இருளும்
அந்தியை விழுங்கும் இரவும்
இரவை உண்ணும் புலரியும்
தவித்தலைந்து
மலைச்சொல்லின்
பெருவாள்வீச்சில்
எல்லாம் துண்டுபட்டு
அழிந்தொழிந்தபின்
அமைந்த போது
எஞ்சியது
இருளல்ல
ஒளியல்ல
பொழுதல்ல
காலமல்ல
நித்யமாய் வீற்றிருக்கும்
மலைத்துளி ஒன்று

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஜனனம் மரணம்

அடங்கும் ஒவ்வொரு அகலும் அதன் புகையும் கனவில் காண்பது எதனை? சிறு சொட்டாய் துளிர்க்கும் சுடரில் ஒளிரும் கனவு எது?