போதும்
சொற்கள் என்றது ஒரு குரல்
கூட்டுக்குள்ளிருந்து
கூடொழிந்தது
பறவை
வானத்தின் கீழ்
கோடிச் சொற்கள்
காத்திருந்தன
ஒற்றைஒரு சொல்தேடி
சிறகிசைத்தது புள்
துளியாய் ஆதியில்
நதி கிடந்தபோது
அது தியானித்ததொரு
சொல்
சுற்றி சுற்றி உன்னைத்தான் பற்றிக்கொள்கிறேன் இத்தனை தனிமையான இரவில் காலம் பிரம்மாண்டமாய் கிடப்பதைக் கண்டபின் முழுதும் அமைதிகொண்டுள்ளேன் இவ்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக