வெள்ளி, 15 நவம்பர், 2024

எங்கு போகிறார் மன்னர்

இத்தனையும்
ஏன் வழிநெடுக
நிற்கவேண்டும்
கன்றுகள்
நாற்றுகள்
சிறு கூம்பு காட்டும் ராகி வயல்
வரிசையாய் நின்று
ஆவல் முகம் காட்டும் தென்னை
இருப்பே தெரியாமல் சில மலர்
பெருங்கூட்டமாய் ஒரே திசைநோக்கி
முகம் காட்டும் மஞ்சள் மலர்க்கூட்டம்
தேமேனென்று குட்டையிலிருந்தி
தலை தூக்கி ஒலி திசை நோக்கும்
எறுமை
எங்கும் எங்குமென
வானம்
வானத்தை கூவி அழைக்கும்
மண்ணின் அகவல்
இத்தனையும்
வழிநெடுக இருக்க
எதையும்‌ நோக்காமல்
அப்படியென்ன வேகம்
மன்னருக்கு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உதிர்ந்து செல்லும் சொல்

 சுற்றி சுற்றி உன்னைத்தான் பற்றிக்கொள்கிறேன் இத்தனை தனிமையான இரவில் காலம் பிரம்மாண்டமாய் கிடப்பதைக் கண்டபின்  முழுதும் அமைதிகொண்டுள்ளேன் இவ்...