திடுதிப்பென்றோ
தடதடவென்றோபடபடப்பாகவோ
முந்தும் வெறியுடனோ
வெல்லும் ஆசையுடனோ
கொள்ளும் இச்சையுடனோ
எதையும் செய்ய வேண்டாமே
ஒரு மலரைப் பார்த்தபடியே
அந்தியைக் கடப்பதுபோல்
இந்த சீன்னூண்டு காலத்தைக்
கடந்துவிடலாமே
சொல் பிறந்தது உன்னில் சொல் சென்றோய்வது உன்னில் இடைப்பட்ட அச்சிறுகாலம் அகலென ஏந்திய சொற்சுடரொளியில் ஆற்றுவிக்கும் கண்ணீர்த்துளியால் ...