உடனிருப்பாய்
எனும் வாக்குறுதியால்மட்டும்
காலத்தின்
அந்த ஒரு பகுதியை
வாழ்ந்து கடந்தேன்
பூனையின் தடங்களைத்
தேடிக்கொண்டிருக்கிறேன்
அதோ வால் மறைகிறது
இட்டுச்சென்றுவிடும்
வாக்குறுதியால்
உறுதியாய் நின்றிருந்த
பருவத்தின் பந்தலுக்கு
அடங்கும் ஒவ்வொரு அகலும் அதன் புகையும் கனவில் காண்பது எதனை? சிறு சொட்டாய் துளிர்க்கும் சுடரில் ஒளிரும் கனவு எது?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக