Sunday, October 27, 2019

ஒதுங்க
நிலமற்ற
பெரு மழை ச் சாலை யில்
உங்கள்
பிரயத்தனங்களை
உத்தரவுகளை
ஜாலங்களை
இதுவரையிலான
உங்கள்
பயணத்தை
அப்படியே விட்டுவிட்டு
இருபுறமும் கரை கட்டி யி ரு க்கும்
சிலிர்க்கும் பசும் கடலில்
மரணத்தின் ஏக்கத்துடன்
விழுந்து மடியுங்கள்
வீழும்
கோடித் துளிகளில்
ஒன்று
உங்களுக்கு
என்றன்றைக்குமான
மரணத்தை
அருளக் கூடும்

Thursday, October 24, 2019

பால்கனியில்
நிலைவை வெறித்துக்
கொண்டிருக்கையில்
தூரத்தில்
நீ வருவதைக்
கண்டேன்

இந்த இல்லத்தை
இந்த என்னை
வைத்துக்கொண்டு
உன்னை எப்படி
எதிர்கொள்வது?

இந்தக்
கரும்புகையின்
வெளியாய்
எப்படியோ
ஆக்கிவிட்டிருக்கிறேன்
இல்லத்தை

சுவர் மூலைகளில்
வௌவால்கள்
அசைவின்றி
தவம் கிடக்கின்றன

இத்தனை
காலம் விட்டு
நீ திடீரெனெ
வருகையில்
இந்த இல்லத்தை
இந்த என்னை
நீ எப்படி
எதிர்கொள்வாய்?

ஆடைகளைக்
கலைந்துவிட்டு
நிர்வாணமாய்
திறந்த என்
பாழும்
இல்லத்தின்
வாசலில்
மண்டியிட்டு
உன்னை
எதிர்நோக்குகிறேன்
நிலவை
மேகம் மறைக்க
மேலும்
பிரகாசமாய்
நீ
வந்துகொண்டிருக்கிறாய்
கண்ணீர் துளி
ஒன்றினை நோக்கி...

Wednesday, October 23, 2019

காதல்
படங்கள் பார்த்து
காதல்
கதைகள் படித்து
காதல்
பாடல்கள் கேட்டு
காதல் கவிதைகளை
ஸ்டேட்டஸாய் வைத்துத்
திரியும்
சுட்டிப்பெண்ணே
காதலால் கசிந்துருகி
வந்திருக்கிறேன்
உன்னை அன்பின்
வதைமுகாமுக்கு
அழைத்துச்செல்ல

Tuesday, October 22, 2019

தூரத்து கருவானில்
புள்ளொன்று
பறந்து
தீட்டிச் செல்கிறது
முதல் கீற்றை

உலகம் கொள்ளும்
ஆகச் சிறந்த மௌனம்
தொடர
லேசான
கொலுசின் சிணுங்கல்
உன் குதிங்காலின்
தூய்மையைச்
சொல்கிறது

உனக்காகத்தான்
காத்திருக்கிறது
வான்நிலம்
வெறுங்கருமையை
உலையச்செய்யும்
வண்ணங்களாக்கிவிட்டு
செல்
உன்னைத் தொடர்வதில்
துவங்கட்டும்
ஒரு நாள்

Monday, October 21, 2019

இவ்வளவு வேகம்
வேண்டாமே

அன்று பிறந்த
நாய்க்குட்டிகளை
நீங்கள்
இடறிவிடக்கூடும்

சிறு கண்களென
பூத்திருக்கும்
மலர்களை
பார்க்காமல்
கடந்து விட க் கூடு ம்

பாரமெல்லாம்
மறந்து
சற்று நாணும்
சாலையோரப்
பெண்ணை
பார்க்காமலே
போய்விட்டால்?

வானம்
ஆசையாய்
மழையால்
பூமியை அள்ள வர
நீங்கள்
குடையுடன்
வேகமாய் நடையைப்போட்டால்
அவை
கோபிக்காதா?

Sunday, October 20, 2019

இவ்வளவு
அழகாய்
நீ வந்து விட்ட போதும்

இவ்வளவு
நேர்த்தியாய்
நீ என்னை
நோக்கிக் கொண்டிருக்கும் போதும்

ஸ்தூலமற்ற
தவிப்பின்
பெருவலிகளை
பொய்யாக்கி
நீ இவ்வளவு
ஸ்தூலமாய்
என் முன்
என் கண்முன்
நிற்கும் போதும்

என் அறைக்குள்
நான் வளர்த்துவரும்
அந்த ஆயிரமாண்டுப்
பறவை
அமர்வது போல்
அமர்ந்துவிட்டு
மீண்டும்
பாட த் து வங்கிவிட்டது
பெருவலிகளின்
பாடலொன்றை

Saturday, July 13, 2019

நிழல்

அசைவற்ற
சுவற்றில்
விழுந்தாடுகிறது
மரக்கிளையின்
நிழல்

ஒருகணம்
ஈரத்தலையை
உதறி உலர்த்தும்
பெண் போலவும்

ஒரு கணம்
நெஞ்சை
பிறழச்செய்யும்
ஓவியம்
போலவும்

உயிரள்ளிப்
பருக வரும்
மென்கையின்
கூர்நகம்
போலும்

உறசாகத்தில்
தத்தளிக்கும்
மனதைப்
போலவும்

முன்னும்
பின்னுமாய்
எல்லையின்றி
நீளும்
நடனம்
போலும்

அசைவற்ற
நிச்சலன
சுவற்றை
அழகால்
நிறப்பிச் செல்கிறது
அந்த
இரவும் அதன்
ஒளியும்

Wednesday, May 1, 2019

உன் கழுத்தில்
துடிக்கும்
இதயத்தின்
மென்குமிழிகளுடன்

ஈரமான
மலரை ஒற்றியெடுப்பது
போன்ற உன்
முத்தங்களுடன்

மழையைஅஞ்சி
மழையின்றி
மழைக்கனவுகளுடன்
குகைகளின் ஆழத்திற்குள் சுருண்டுவாழும்
உயிர்களின் பிரதேசத்திற்குள்

ஏன் இவ்வளவு
உறுதியாய்
வந்து கொடிருக்கிறாய்

மேகமற்ற பாலைமண்
வெயிலிடம்  ஒப்படைத்து
நொடிகளை அலைந்துகொண்டு
காத்திருக்க்கும்
புழுதியின் நிலத்தில்
சிறுகோடெனெ
உன் உருவம்
நலுங்கிறது

உடன் நடந்து
வருகிறது
நதிப்பசுமை
'அன்னைப்பழம்'

ஒரு தர்பூஸனிப்
பழம் சாப்பிடுங்கள்

நதி
ஊற்றெடுக்கும்

அருவியாய்
ஒழுகிச்செல்லும்

உங்கள் தாடை தழைந்து
சிறு குளம்
உருவாகும்

உங்கள்
பல்லின் உறுதிக்கும்
கொஞ்சமும்
வலுவற்றது
இப்பழம்

அடித்தால் உடையாது
கத்தி வேண்டும்
கண்ணீருடன்
பிளந்துகொள்ளும்

உடைந்து உருகிப்பெருகி
இனித்து வெள்ளமாகும்
நீர் ப் பெரு க் கு

அனுமனைப்போல்
நெஞ்சைப்பிளந்து
நீர்மை காட்டி
நெக்குருகி
இப்படி தசையை
திண்ணக் கொடுத்து
தாகம் தீர்க்க
அன்னையால்
மட்டும்தான் முடியும்








நம் அறையில்
நலுங்கி
கண் சிமிட்டி
உடைந்தாடி
ஒரு தீபம்

உறங்கும்
நம் மனவெளிகளில்
ஆயிரம்
உதயத்தின் கிரணங்கள்

Tuesday, April 30, 2019

அதனதன் இயல்பு

நான் காதல் திரைப்படங்களை
மட்டும்
பார்க்கத் துவங்கினேன்

ஆடைகளிடையே மணிக்கணக்காக்
களித்திருக்க பழகிக்கொண்டேன்

எண்ணற்ற
செல்லக் கோணல்களுடன்
செல்பிக்கள் எடுத்துக் கொண்டே ன்

நாய்க்குட்டிகளை
கொஞ்சத் துவங்கினேன்

ஆண்கள் மோசமானவர்கள்
என அவ்வப்போது
பெண்ணியம் பேசினேன்

சோகங்களுடன்
கண்ணீரால் மட்டும்
உரையாடுனேன்

கண்ணீரைக் கோரும் வரை
சோகத்தின் இருப்பை
பொருட்படுத்தாமலிருக்கப்பழகினேன்

ஒரு அதிகாலையில்
சோகமெல்லாம் ஒரே அடியாக
ஒழிந்துவிட்டதாக
இயல்பானேன்

பரிசுகளை
ஒளித்துவைக்கத்
துவங்கினேன்

என் டைரியை
யாராலும் வாசிக்க முடியாத
மொழியில் எழுதினேன்

எனக்கே எனக்கான
ரகசியங்களை
காக்கத்துவங்கினேன்

ரகசியங்களை
மானசீகமாக
மட்டும்
பகிர்ந்து கொண்டே ன்

இவ்வளவும்
நீ என்னிடம்
ஒருமுறையாவது
மலர்வாய் என்பதற்காக

ஆனாலும்
ஒரு காலையில்
இன்ப அதிர்ச்சி கொடுத்து
உன் தோழி நம்
இல்லம் வந்த போது
ஒரு முழுமையான
மலர்தல் எப்படி இருக்கும்
என
காட்டினாய்

ஓர் இரவில்
உன் தோழியுடன்
கைக்கோத்து
பேசிச்சிரித்து
மகிழ்ந்து
ஒரு இரவு நடை சென்றுகொண்டிருந்தாய்

அன்று
குளிர்ந்திருந்தது
நிலவு முழுமையாய் இருந்தது
கடல் அளவாய் அலைவீசிற்று
ஷெல்லி கூட
இன்பமாய் கொஞ்சம் வாலட்டிவிட்டு
நேரத்திற்கு
உறங்கச் சென்றது
நீங்களிருவரும்
வெகு நேரம்
பேசி ச் சி ரி த் தீ ர் கள்
இரு இயல்பு
உரசி அலைவது போல

அந்தப் புலரியின் நிறப் பிரளயத்தின் முன் உயிரற்று நிற்கையில் தூரத்துப் பறவைக்குரல் விடுவித்தது நிறத்தை சுழித்து கலவையாக்கும் கண்ணீர்...