வெள்ளி, 15 நவம்பர், 2024

சிவநாமக்கிளியிடன்
எதைச்சொன்னாலும்
சிவ சிவ எனும்
உங்கள் மகிழ்ச்சிக்கும்
பேருவகைக்கும்
உங்கள் துன்பத்துக்கும்
மீளாத் துயரங்களுக்கும்
ஆச்சர்யங்களுக்கும்
சராசரியான சலிப்புகளுக்கும்
உருளும் பந்துக்கும்
விழுநட்சத்திரத்துக்கும்
சிவ சிவ சிவ சிவ

அதனிடம் சென்று
சிவ சிவ
என்றேன்
வெடுக்கென முகம் திருப்பி
நோக்கிற்று
ஜ்வாலையென உக்கிரத்துடன்
கூண்டுடைத்து எழுந்து
நெஞ்சக்கூட்டை உடைத்து
உள்நுழைந்தது
எது கிளி? எது நான்?
கிளி எது? நான் எது?
உள்ளொடுங்கி என் உள்ளமைந்தபின்
எதிரொலித்தது
சிவ சிவ என்று
கிளிக்குள்ளிருக்கும் நான்
சிவ சிவ என்றேன்
என்னுள்ளிருக்கும் கிளி
சிவ சிவ என்றது
இப்படித்தான் ஆனது
எல்லாம் சிவமாக

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிருஷ்டியின் போக்கு

அதலம், விதலம், சுதலம், தராதலம், ரசாதலம், மகாதலம், பாதாளம் - நம் காலுக்குக்கீழிருக்கும் ஏழு லோகங்கள் இவை. நம் மனதிற்குள்ளும் இத்தனை லோகங்களும...