செவ்வாய், 26 நவம்பர், 2024

பெருவிருட்சம் அடர்ந்த
இவ்வனாந்திரத் தனிமையில்
இடறி விழ நழுவி
மேலெல்லாம்
நிலவு வழிந்து கிடக்கும்
இப்பொழுதில்
உன்னைப்பற்றியே
நினைத்துக்கொண்டிருக்கிறேன்

வனத்தின் ஏதாந்தத்தின் மேல்
ஒரு சொல்கூட துணையில்லா வானம்
கடலின் ஆழத்தில் எழுகிறது
அழுந்திய காலங்களின் குரலொன்று
நான் என் சின்ன பிரிவை
அவ்வளவு‌ கண்ணீருடன்
அணைத்து இன்புறுகிறேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஜனனம் மரணம்

அடங்கும் ஒவ்வொரு அகலும் அதன் புகையும் கனவில் காண்பது எதனை? சிறு சொட்டாய் துளிர்க்கும் சுடரில் ஒளிரும் கனவு எது?