அந்தியை
தீட்டி முடிந்தபாடில்லைஉளத்தை பிறழச்செய்யும்
உண்மையின்
அழியாவண்ணங்கள்
முயங்கி நொடிக்குநொடி
மாறும் வானின்
மாக்கோலத்தை
தீட்ட
அந்தியின் ஆன்மாவை
ஒலிக்கும்
தனிப்பறவைக்குரலொன்றால்
மட்டும்தான் ஆகும்
மற்றபடி
கித்தானில் கூடுவதெல்லாம்
வெறும் ஏக்கம்
பெரும் சதுப்பு அசைவறுத்த முதலை அசைவில்லாத பறவை அசைவற்ற நீரில் மிதக்கும் அசைவேதுமற்ற சிறு பூச்சி சதுப்பின் ரீங்காரம் ஊன்றிய கால் வழி ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக