வெயில் பெருமூச்சுகளை
அறிவதே இல்லைஅது அறிந்தது
வேகத்தை மட்டுமே
இரவு
அள்ளிப் பருகுகிறது
ஒரு நாளின் தாகத்தை
பின் அதன் பெருமூச்சில்
உச்சி சிலிக்கின்றன
வெயில் அலைவதை
வேடிக்கை பார்த்த மரங்கள்
அடங்கும் ஒவ்வொரு அகலும் அதன் புகையும் கனவில் காண்பது எதனை? சிறு சொட்டாய் துளிர்க்கும் சுடரில் ஒளிரும் கனவு எது?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக