வெள்ளி, 22 நவம்பர், 2024

பாலையின் வெயில்
வாட்டும்போது
உடனிருந்த மழைகுளிரை
நினைத்துக்கொள்கிறேன்
நீர் வெயிலாகிவிடும் பாலையில்
மணற்புயலாய்
என்னைச் சூழ்கிறாய்
கடலென இகம்
சிறு மத்தென அலைப்புறு‌மனம்
எல்லாம் சலித்தமரும்
நெஞ்சத்தின் பதற்றச் சொடுக்குகள்
இசைக்கின்றன
நின் நாமத்தை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஜனனம் மரணம்

அடங்கும் ஒவ்வொரு அகலும் அதன் புகையும் கனவில் காண்பது எதனை? சிறு சொட்டாய் துளிர்க்கும் சுடரில் ஒளிரும் கனவு எது?