பாலையின் வெயில்
வாட்டும்போதுஉடனிருந்த மழைகுளிரை
நினைத்துக்கொள்கிறேன்
நீர் வெயிலாகிவிடும் பாலையில்
மணற்புயலாய்
என்னைச் சூழ்கிறாய்
கடலென இகம்
சிறு மத்தென அலைப்புறுமனம்
எல்லாம் சலித்தமரும்
நெஞ்சத்தின் பதற்றச் சொடுக்குகள்
இசைக்கின்றன
நின் நாமத்தை
பெரும் சதுப்பு அசைவறுத்த முதலை அசைவில்லாத பறவை அசைவற்ற நீரில் மிதக்கும் அசைவேதுமற்ற சிறு பூச்சி சதுப்பின் ரீங்காரம் ஊன்றிய கால் வழி ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக