பாலையின் வெயில்
வாட்டும்போதுஉடனிருந்த மழைகுளிரை
நினைத்துக்கொள்கிறேன்
நீர் வெயிலாகிவிடும் பாலையில்
மணற்புயலாய்
என்னைச் சூழ்கிறாய்
கடலென இகம்
சிறு மத்தென அலைப்புறுமனம்
எல்லாம் சலித்தமரும்
நெஞ்சத்தின் பதற்றச் சொடுக்குகள்
இசைக்கின்றன
நின் நாமத்தை
சுற்றி சுற்றி உன்னைத்தான் பற்றிக்கொள்கிறேன் இத்தனை தனிமையான இரவில் காலம் பிரம்மாண்டமாய் கிடப்பதைக் கண்டபின் முழுதும் அமைதிகொண்டுள்ளேன் இவ்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக