செவ்வாய், 19 நவம்பர், 2024

படித்த கவிதையை
மீண்டும் வாசித்தேன்
அன்புக்காக ஏங்கும்
ஒரு சொல்லை சுமந்தபடி
வானம் பார்த்தபோது
இதே போலொரு பால்கனியில்
பத்து வருடம் முன்
இதே போலொரு
அன்புசொல் வாசித்து
வானம் பார்த்தது
அகமெழுந்தது
லேசான திகைப்பின் கணத்தில்
காலம் எனும்‌ சொல்
என் கபாலமுடைத்து உள்நுழைந்தது
ஆயிரம் வருடம் முன்பு
இதே போலொரு காதற்சொல்லை
வாசித்து
இதே வானத்தை பார்த்ததை நினைவுடுத்தியது
காலம் கபாலத்திற்குள் சுழித்தது
பல லட்சம் வருடம் முன்
மாக்கடலில்
ஒலிக்கும் பெருமீனின்
ஏக்கத்தை
வலசைப்பறவையாக
கேட்டுக்கொண்டிருந்தேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஜனனம் மரணம்

அடங்கும் ஒவ்வொரு அகலும் அதன் புகையும் கனவில் காண்பது எதனை? சிறு சொட்டாய் துளிர்க்கும் சுடரில் ஒளிரும் கனவு எது?