புதன், 18 டிசம்பர், 2024

இரவு
சலனமின்மையால் ஆனது
எழுந்த புகையை
காற்று நெருக்கி நிறுத்தியது
போல்
உயிரின்
சிற்றசைவுமின்றி
கிடக்கும் இவ்விரவு
என்னுள் நிரம்பியது
என் தூரிகை
அசைய மறுக்கின்றன
அதன் சொல்
ஏங்கி அழிகிறது
குரலெழவில்லை
சதுப்பின் நிலம்
மெல்ல‌‌ விம்மி மைகிறது
புலரியின் துளிபட்டு
எல்லாம் பெருகும்பொழுதில்
நான் நம்பமருக்கிறேன்
இங்குதான் இரவு
கிடந்ததென்று 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஜனனம் மரணம்

அடங்கும் ஒவ்வொரு அகலும் அதன் புகையும் கனவில் காண்பது எதனை? சிறு சொட்டாய் துளிர்க்கும் சுடரில் ஒளிரும் கனவு எது?