சனி, 21 டிசம்பர், 2024

ஜன்னல் கம்பியை
பற்றிப் படரும்
பச்சைக்கொடியே
வானம் வரைக் காட்டும்
எட்டுக் கம்பிகளில்
சுற்றி
சுற்றி
சுற்றியானபின்
எங்கு செல்வாய்?
உன் நுனியில்
அரும்பத் துடிக்கும்
உயிர்ப்பை எங்கு
பெற்றாய்?
தளிரிலையாகத் தவிக்கும்
உன் நுனி வாழும்
தெய்வம்
எக்கணத்தில்
ஆரோகணித்தது?
உன் ஒவ்வொரு அசைவுக்கும்
காலத்தின் சிற்றணு அசைகிறது
வனத்தின் மேல்
ஒரு பெருமூச்சு நடந்து செல்கிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிருஷ்டியின் போக்கு

அதலம், விதலம், சுதலம், தராதலம், ரசாதலம், மகாதலம், பாதாளம் - நம் காலுக்குக்கீழிருக்கும் ஏழு லோகங்கள் இவை. நம் மனதிற்குள்ளும் இத்தனை லோகங்களும...