ஞாயிறு, 8 டிசம்பர், 2024

ஒரு நாள் முச்சூடும்
நீ என்னுடனேயே இருப்பதாய்
ஏன் கற்பனை
செய்துகொள்கிறேன்?
மாஞாலமெங்கும்
அலைகள்  ஏன்
உன் பாறைகளிலேயே
மோதி உடைகிறது?
நான் ஏன்
இல்லாத உன்னிடம்
பேசிக்கொண்டிருக்கிறேன்?
ஒரு சொல்லும் ஒலிக்காத
பிலத்தில் என்
மலர்களை ஏன்
பூஜிக்கவேண்டும்?
இவ்விரவில்
மலைக்கு மேல்
பிறையெழுகையில்
விழும் அருவி
நிலவுக்குள் வழிந்து
உடைகையில்
நான் ஏன்
உடைந்துப் பெருகி
உன் சமிக்ஞை கண்டவனாய்
பைத்தியமானேன்?
உன் ஏரி ஏன்
ஒரு சலனமுமிலாமல்
இரவை சூடிக்கொண்டு
தியானிக்கிறது?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிருஷ்டியின் போக்கு

அதலம், விதலம், சுதலம், தராதலம், ரசாதலம், மகாதலம், பாதாளம் - நம் காலுக்குக்கீழிருக்கும் ஏழு லோகங்கள் இவை. நம் மனதிற்குள்ளும் இத்தனை லோகங்களும...