சனி, 21 டிசம்பர், 2024

இப்புலரியில்
ஒரு கோவிலிலிருந்து
கண் விழிக்கும்
இவ்வூரில்
இரவெல்லாம் தூங்காத
கனக்கும் கண்களுடன்
எதை வேட்கிறேன்
எத்தனைக் காலமாய்
இப்படி விடிகிறது
எத்தனைக் காலமாய்
நான் இப்படி அமர்ந்திருக்கிறேன்
ஊர் பதைத்து பணிக்குக்
கிளம்பும்‌முன்
ஆயிரம்‌ கால் மண்டபத்துக்
கூரையில்
உறக்கம் கொள்ளும்
வௌவால்களின் கனவில்
காலத்தின் எவ்விழை ஊடாடும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிருஷ்டியின் போக்கு

அதலம், விதலம், சுதலம், தராதலம், ரசாதலம், மகாதலம், பாதாளம் - நம் காலுக்குக்கீழிருக்கும் ஏழு லோகங்கள் இவை. நம் மனதிற்குள்ளும் இத்தனை லோகங்களும...