ஞாயிறு, 8 டிசம்பர், 2024

பிறவி

நான் தீர்ந்துபோவேன்
ஆனாலும்
ஒரு துளி எஞ்சும்

என்‌ நிலமெல்லாம்
நீர் கொண்டபின்னும்
வரண்ட கூழாங்கல் ஒன்று
நீருக்குள் கிடக்கும்

வனத்தின் ஆழத்தில்
உயிரில்லாத் தடமொன்று
எஞ்சியே
உள்ளது

கடலுக்குள்
கல் கட்டி
இரக்கிய பின்னும்
எஞ்சிவிடும் எப்படியோ
ஒரு மூச்சு

இப்படி எஞ்சியவைதான்
மீண்டும் மீண்டும்
அழைத்து வருகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பெரும் சதுப்பு அசைவறுத்த முதலை அசைவில்லாத பறவை அசைவற்ற நீரில் மிதக்கும் அசைவேதுமற்ற சிறு பூச்சி சதுப்பின் ரீங்காரம் ஊன்றிய கால் வழி ...