சனி, 21 டிசம்பர், 2024

இரவுக்குள்
பெய்யும் மழையில்
உயிர்ப்பெருகி நிற்கிறது
எவ்வொளியில்‌ காட்சியாகின்றன
விழும்‌‌ துளிகள்?
இலையின் ஒளிர்
காணக்கிடைப்பது எங்ஙனம்?
யார் கவித்தது
இம்மாபெரும் இருளை
நிலத்தின் மீது
நெஞ்சின் கூடுடைத்து
காதலின் வெளிக்குள்
பாயத் துடிக்கும்
இப்பறவையை
என்ன செய்வது?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உதிர்ந்து செல்லும் சொல்

 சுற்றி சுற்றி உன்னைத்தான் பற்றிக்கொள்கிறேன் இத்தனை தனிமையான இரவில் காலம் பிரம்மாண்டமாய் கிடப்பதைக் கண்டபின்  முழுதும் அமைதிகொண்டுள்ளேன் இவ்...