ஞாயிறு, 8 டிசம்பர், 2024

பேச்சொலி
கேட்டுக்கொண்டே இருக்கிறது
இனி இந்நிலத்தின்
சிறு துகள் விழுந்தால்
கூட இவ்வேரி
பூஞ்சை பூத்தழியும்
நீர் வடிய ஓடி
வனத்தின் கருவினுள்
நித்யமாய் நிற்கும்
பெருவிருட்சம் முன்
உடைந்து அழுதுப் பரவியது
அலை ஓய்ந்தபின்
வானம் விழுந்து
உடைத்து உள் பரவியது
சிறு துளி நீர்
அலுங்காமல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிருஷ்டியின் போக்கு

அதலம், விதலம், சுதலம், தராதலம், ரசாதலம், மகாதலம், பாதாளம் - நம் காலுக்குக்கீழிருக்கும் ஏழு லோகங்கள் இவை. நம் மனதிற்குள்ளும் இத்தனை லோகங்களும...