ஞாயிறு, 8 டிசம்பர், 2024

பேச்சொலி
கேட்டுக்கொண்டே இருக்கிறது
இனி இந்நிலத்தின்
சிறு துகள் விழுந்தால்
கூட இவ்வேரி
பூஞ்சை பூத்தழியும்
நீர் வடிய ஓடி
வனத்தின் கருவினுள்
நித்யமாய் நிற்கும்
பெருவிருட்சம் முன்
உடைந்து அழுதுப் பரவியது
அலை ஓய்ந்தபின்
வானம் விழுந்து
உடைத்து உள் பரவியது
சிறு துளி நீர்
அலுங்காமல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உதிர்ந்து செல்லும் சொல்

 சுற்றி சுற்றி உன்னைத்தான் பற்றிக்கொள்கிறேன் இத்தனை தனிமையான இரவில் காலம் பிரம்மாண்டமாய் கிடப்பதைக் கண்டபின்  முழுதும் அமைதிகொண்டுள்ளேன் இவ்...