பகலின் கரங்கள்தான்
சுழித்து வளைந்துமலர்ந்து நடனபாவங்களிட்டு
கட்டிற்று
அந்தியின்
கைகள்தான்
அணிவித்தன
நிலத்தின்மேல்
பெருகியுள்ளது
இருளின் மலர்கள்
இன்று லேசாக மழை பெய்தது சொல் எதுவும் உதிக்கவில்லை கூடடையும் பறவையொலியால் நிறைத்துக்கொண்டேன் மழை நாளில் பேருருக்கொண்டுவிட்ட அகத்தை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக