நீ கொடுத்த
குடுவையில்ஒன்பது ஓட்டைகள்
நீர்
தானியம்
நாணயம்
புகைவஸ்துக்களான
அன்பு அறம் கருணை
எதையும் சேமிக்க
முடியவில்லை
நாகங்கள் வந்து
செல்ல மட்டும்
ஏதுவாய் ஒன்பது துளைகள்
திருப்பி எடுத்துக்கொள்
பேய்க்கணமாகி
உன் சுடலையில்
வாழ்ந்துகொள்கிறேன்
சுற்றி சுற்றி உன்னைத்தான் பற்றிக்கொள்கிறேன் இத்தனை தனிமையான இரவில் காலம் பிரம்மாண்டமாய் கிடப்பதைக் கண்டபின் முழுதும் அமைதிகொண்டுள்ளேன் இவ்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக