நீ கொடுத்த
குடுவையில்ஒன்பது ஓட்டைகள்
நீர்
தானியம்
நாணயம்
புகைவஸ்துக்களான
அன்பு அறம் கருணை
எதையும் சேமிக்க
முடியவில்லை
நாகங்கள் வந்து
செல்ல மட்டும்
ஏதுவாய் ஒன்பது துளைகள்
திருப்பி எடுத்துக்கொள்
பேய்க்கணமாகி
உன் சுடலையில்
வாழ்ந்துகொள்கிறேன்
இன்று லேசாக மழை பெய்தது சொல் எதுவும் உதிக்கவில்லை கூடடையும் பறவையொலியால் நிறைத்துக்கொண்டேன் மழை நாளில் பேருருக்கொண்டுவிட்ட அகத்தை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக