நீ கொடுத்த
குடுவையில்ஒன்பது ஓட்டைகள்
நீர்
தானியம்
நாணயம்
புகைவஸ்துக்களான
அன்பு அறம் கருணை
எதையும் சேமிக்க
முடியவில்லை
நாகங்கள் வந்து
செல்ல மட்டும்
ஏதுவாய் ஒன்பது துளைகள்
திருப்பி எடுத்துக்கொள்
பேய்க்கணமாகி
உன் சுடலையில்
வாழ்ந்துகொள்கிறேன்
அடங்கும் ஒவ்வொரு அகலும் அதன் புகையும் கனவில் காண்பது எதனை? சிறு சொட்டாய் துளிர்க்கும் சுடரில் ஒளிரும் கனவு எது?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக