மண்ணுக்கு மேல் எழும்
சொற்களைகூண்டுப் பறவைகள் கொத்திச்
செல்கின்றன
பிரயத்தனமின்றி
உதிக்கும் ஒரு சொல்
மண்ணுக்குக்கீழ்
வேறொரு உலகில்
வண்ணமாகிக்கொண்டிருக்கிறது
சொல்லுக்கு தவம் புரிவோர்
உண்மையில் தியானிப்பது
அம்மலரை
அடங்கும் ஒவ்வொரு அகலும் அதன் புகையும் கனவில் காண்பது எதனை? சிறு சொட்டாய் துளிர்க்கும் சுடரில் ஒளிரும் கனவு எது?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக