மண்ணுக்கு மேல் எழும்
சொற்களைகூண்டுப் பறவைகள் கொத்திச்
செல்கின்றன
பிரயத்தனமின்றி
உதிக்கும் ஒரு சொல்
மண்ணுக்குக்கீழ்
வேறொரு உலகில்
வண்ணமாகிக்கொண்டிருக்கிறது
சொல்லுக்கு தவம் புரிவோர்
உண்மையில் தியானிப்பது
அம்மலரை
நகரம் உயிர் நீங்கும் விலங்கைபோல் உச்ச விசையில் துடித்துக்கொண்டே இருந்தது பெருஞ்சாலையெங்கும் கிளையும்இலையும் சேறுமாய் அடித்துச்செல்லும்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக