ஞாயிறு, 1 டிசம்பர், 2024

மண்ணுக்கு மேல் எழும்
சொற்களை
கூண்டுப் பறவைகள் கொத்திச்
செல்கின்றன

பிரயத்தனமின்றி
உதிக்கும் ஒரு சொல்
மண்ணுக்குக்கீழ்
வேறொரு உலகில்
வண்ணமாகிக்கொண்டிருக்கிறது
சொல்லுக்கு தவம் புரிவோர்
உண்மையில் தியானிப்பது
அம்மலரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஜனனம் மரணம்

அடங்கும் ஒவ்வொரு அகலும் அதன் புகையும் கனவில் காண்பது எதனை? சிறு சொட்டாய் துளிர்க்கும் சுடரில் ஒளிரும் கனவு எது?