மண்ணுக்கு மேல் எழும்
சொற்களைகூண்டுப் பறவைகள் கொத்திச்
செல்கின்றன
பிரயத்தனமின்றி
உதிக்கும் ஒரு சொல்
மண்ணுக்குக்கீழ்
வேறொரு உலகில்
வண்ணமாகிக்கொண்டிருக்கிறது
சொல்லுக்கு தவம் புரிவோர்
உண்மையில் தியானிப்பது
அம்மலரை
அதலம், விதலம், சுதலம், தராதலம், ரசாதலம், மகாதலம், பாதாளம் - நம் காலுக்குக்கீழிருக்கும் ஏழு லோகங்கள் இவை. நம் மனதிற்குள்ளும் இத்தனை லோகங்களும...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக