புதன், 18 டிசம்பர், 2024

உன் இரவின்
முன்
வெறும்
இச்சையின் பெருக்காய்
நிற்கிறேன்
நாகத்தின் கண் ஒளிர
என் பற்கள்
மாமிச ருசிக்கு
கூர்க்கட்டியுள்ளது
ஏரியின் சிற்றலையில்
நட்சத்திரமெல்லாம்
கலைந்துடைகிறது
பெருகிக்கிடக்கும் இரவாலும்
வளைக்க முடியா நாணலை
இவ்வனத்தில்
யார் நட்டு‌ வளர்த்தது?
நிலவின் மகுடிக்குரலுக்கு
நாகமொன்று உடல் முறிக்கிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஜனனம் மரணம்

அடங்கும் ஒவ்வொரு அகலும் அதன் புகையும் கனவில் காண்பது எதனை? சிறு சொட்டாய் துளிர்க்கும் சுடரில் ஒளிரும் கனவு எது?