புதன், 18 டிசம்பர், 2024

உன் இரவின்
முன்
வெறும்
இச்சையின் பெருக்காய்
நிற்கிறேன்
நாகத்தின் கண் ஒளிர
என் பற்கள்
மாமிச ருசிக்கு
கூர்க்கட்டியுள்ளது
ஏரியின் சிற்றலையில்
நட்சத்திரமெல்லாம்
கலைந்துடைகிறது
பெருகிக்கிடக்கும் இரவாலும்
வளைக்க முடியா நாணலை
இவ்வனத்தில்
யார் நட்டு‌ வளர்த்தது?
நிலவின் மகுடிக்குரலுக்கு
நாகமொன்று உடல் முறிக்கிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உதிர்ந்து செல்லும் சொல்

 சுற்றி சுற்றி உன்னைத்தான் பற்றிக்கொள்கிறேன் இத்தனை தனிமையான இரவில் காலம் பிரம்மாண்டமாய் கிடப்பதைக் கண்டபின்  முழுதும் அமைதிகொண்டுள்ளேன் இவ்...