புதன், 18 டிசம்பர், 2024

உன் இரவின்
முன்
வெறும்
இச்சையின் பெருக்காய்
நிற்கிறேன்
நாகத்தின் கண் ஒளிர
என் பற்கள்
மாமிச ருசிக்கு
கூர்க்கட்டியுள்ளது
ஏரியின் சிற்றலையில்
நட்சத்திரமெல்லாம்
கலைந்துடைகிறது
பெருகிக்கிடக்கும் இரவாலும்
வளைக்க முடியா நாணலை
இவ்வனத்தில்
யார் நட்டு‌ வளர்த்தது?
நிலவின் மகுடிக்குரலுக்கு
நாகமொன்று உடல் முறிக்கிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிருஷ்டியின் போக்கு

அதலம், விதலம், சுதலம், தராதலம், ரசாதலம், மகாதலம், பாதாளம் - நம் காலுக்குக்கீழிருக்கும் ஏழு லோகங்கள் இவை. நம் மனதிற்குள்ளும் இத்தனை லோகங்களும...