வெள்ளி, 6 டிசம்பர், 2024

அவ்வளவு அழகாய்
காலில் இல்லாத
முள்ளை எடுப்பதுபோல்
திரும்பி நோக்குகிறாள்
சகுந்தலை
துஷ்யந்தனை

சற்று அவசரமாய்
அன்றாடம் தைத்த முட்களை
ஒவ்வொன்றாய்
எடுத்தானபின்
செல்லவேண்டும்
வனத்தின் ஆழத்து உரையும்
என் காதலைத் தேடி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நகரம் உயிர் நீங்கும் விலங்கைபோல் உச்ச விசையில் துடித்துக்கொண்டே இருந்தது பெருஞ்சாலையெங்கும் கிளையும்‌இலையும் சேறுமாய் அடித்துச்செல்லும்...