ஞாயிறு, 1 டிசம்பர், 2024

நீர் கோக்காத
ஒரு வரண்ட
கண்களைக்
கண்டேன்

பின் எவ்வதிர்விக்கும்
இமைக்கா விழிகள்
ஒன்றைக் கண்டேன்

நீர்மைகொண்டுருகும்
கருணையால்
ஊடுருவி அகம் தொடும்
கண்கள் கண்டேன்

வெறுப்பாகி
கரிந்து உள் எரியும்
கண்களைக்
கண்டேன்

நித்யத்தை
நோக்கிச்செல்லும்
லயத்தில் நிற்கும்
அசைவற்ற நெற்றிவிழி
கண்டேன்

எல்லாம்‌ கண்டபின்
ஒரு மலரைக்கண்டு
பூரிக்கும் கண்களை
எனதென்று
அள்ளி சூடிக்கொண்டேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிருஷ்டியின் போக்கு

அதலம், விதலம், சுதலம், தராதலம், ரசாதலம், மகாதலம், பாதாளம் - நம் காலுக்குக்கீழிருக்கும் ஏழு லோகங்கள் இவை. நம் மனதிற்குள்ளும் இத்தனை லோகங்களும...