ஞாயிறு, 8 டிசம்பர், 2024

வனஇருளின் ஒளிர்
வழிந்து  ஓடையாகும்
சலசலக்கும் அழைப்பில்
நீங்கிவிடுகிறேன்
இருக மூடிக்கொண்டிருக்கும்
இந்நகரத்தினை
என் குடில்
ஒரு மாயக்கம்பளமாகி
எழுந்து பறவைகளைப் பின் தொடர்கிறது
நான் சென்றாகவேண்டும்
மையத்திலிருந்து மதுரம் கசிந்து
காடே பித்தாகும் இரவுகளில்
நான் கனமான இவ்வுடல்
சுமந்தலைவேனில்லை
கானெறியும் தூண்டில்
கூர்சுளுக்கியை ஆசையாய்
நெஞ்சில்‌‌ கோத்துச் செல்கிறேன்
உயிர் என்பது
துளிஎஞ்சாமல்‌ அழியத்தானே?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிருஷ்டியின் போக்கு

அதலம், விதலம், சுதலம், தராதலம், ரசாதலம், மகாதலம், பாதாளம் - நம் காலுக்குக்கீழிருக்கும் ஏழு லோகங்கள் இவை. நம் மனதிற்குள்ளும் இத்தனை லோகங்களும...