புதன், 4 டிசம்பர், 2024

அன்றாடமென்பது
பறவையொலியும்
இலையின் கதையாடலும்
அணில் கீறிச்சிடலும்
அவ்வப்போது
வரும் எருதின் வால்சுழற்றலும்தான்
இன்று ஒரு யானைக்கூட்டம்
என் குடில் முன் வந்தது
மூதாட்டி காதுலைத்து
நோக்கினாள்
மரங்கள் சில உலுக்கப்பட்டன
பிண்டங்கள் விழுந்தன
சில உரையாடல்கள்
அடிக்கடி வருவதாய் சொன்ன
மூதாட்டியை
வழியனுப்பிவிட்டு
அகலுக்கு
எண்ணையிட்டு
அமர்ந்துகொண்டேன்
சுவரில் வேழத்து நிழல்
விழுவதை குருவி
சுட்டிக்காட்டியது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிருஷ்டியின் போக்கு

அதலம், விதலம், சுதலம், தராதலம், ரசாதலம், மகாதலம், பாதாளம் - நம் காலுக்குக்கீழிருக்கும் ஏழு லோகங்கள் இவை. நம் மனதிற்குள்ளும் இத்தனை லோகங்களும...