ஞாயிறு, 8 டிசம்பர், 2024

இன்று உடல் துண்டானேன்
மலையை அடித்துச் செல்லும்
பேரலை இச்சிறு
உயிரின் மேல்
ஏன் பிரவகித்தது?
சலனமில்லா
இரவெழுந்த வனம் நோக்கி
உயிர்ப்பிரக்ஞையின்றி
நிற்கிறேன்
சன்னதமெடுத்தாடும்
காற்றால் மலையை
அசைக்க முடியவில்லை
ஆதியாழங்களிலிருந்து
வந்து விழுகிறது
எரிகல்லொன்று
வனம் பற்றி
கூடு கருக
ஜ்வாலையை அள்ளிப்
போர்த்திக்கொள்கிறது
பறவை
எரிபற்றி உடைந்து விழும்
கிளையில் எழுகிறது
அப்புள்ளின் தீக்குரல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிருஷ்டியின் போக்கு

அதலம், விதலம், சுதலம், தராதலம், ரசாதலம், மகாதலம், பாதாளம் - நம் காலுக்குக்கீழிருக்கும் ஏழு லோகங்கள் இவை. நம் மனதிற்குள்ளும் இத்தனை லோகங்களும...