இரவின் சருகுகள்
என் சிறு அசைவையும்சப்திக்கின்றன
இரவின் மலர்களோடு
மலராய்
படம் விரித்த நெளியுடல்
நிற்கிறது
மலரின் பரிமளத்தினூடே
நஞ்சின் நெடி
வீசும் இவ்விரவில்
நான் நிசப்தமான வானை
பெருகும் சுவாசமெடுத்து
நிறைத்துக்கொள்கிறேன்
வனமெங்கும் நிறைந்த வசந்ததின் மலர்களாய் நின்றது மென்மையாய் மிதந்து வந்து நீர்ச்சாட்டத்துமிகளாய் தொட்டது அசையா வேர்களில் தியானித்திருந்த...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக