புதன், 18 டிசம்பர், 2024

இரவின் சருகுகள்
என் சிறு அசைவையும்
சப்திக்கின்றன
இரவின் மலர்களோடு
மலராய்
படம் விரித்த நெளியுடல்
நிற்கிறது
மலரின் பரிமளத்தினூடே
நஞ்சின் நெடி
வீசும் இவ்விரவில்
நான் நிசப்தமான வானை
பெருகும்‌ சுவாசமெடுத்து
நிறைத்துக்கொள்கிறேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிருஷ்டியின் போக்கு

அதலம், விதலம், சுதலம், தராதலம், ரசாதலம், மகாதலம், பாதாளம் - நம் காலுக்குக்கீழிருக்கும் ஏழு லோகங்கள் இவை. நம் மனதிற்குள்ளும் இத்தனை லோகங்களும...