இரவின் சருகுகள்
என் சிறு அசைவையும்சப்திக்கின்றன
இரவின் மலர்களோடு
மலராய்
படம் விரித்த நெளியுடல்
நிற்கிறது
மலரின் பரிமளத்தினூடே
நஞ்சின் நெடி
வீசும் இவ்விரவில்
நான் நிசப்தமான வானை
பெருகும் சுவாசமெடுத்து
நிறைத்துக்கொள்கிறேன்
அடங்கும் ஒவ்வொரு அகலும் அதன் புகையும் கனவில் காண்பது எதனை? சிறு சொட்டாய் துளிர்க்கும் சுடரில் ஒளிரும் கனவு எது?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக