மேகங்கள் முட்டி
வனத்தின் மேல்கவிந்துவிட்டன
இரவு பொருமிக்கொண்டு
அமர்ந்திருந்தது
இரவுக்குள் ஓடும்
நதிச்சுழிப்புகள்
வின்நீரை தாகிக்கின்றன
இருளுக்குள்
ஊடறுத்துச் செல்லும்
இப்பறவை
இப்பிறவியை முடித்துக்கொண்டு
எங்கு செல்கிறது?
அடங்கும் ஒவ்வொரு அகலும் அதன் புகையும் கனவில் காண்பது எதனை? சிறு சொட்டாய் துளிர்க்கும் சுடரில் ஒளிரும் கனவு எது?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக